கொல்லாஜ் மாண்டேஜ் கவிதைகள்

{இவை கூட்டுக்கவிதைகள் அல்ல. கொல்லாஜ் மாண்டேஜ் கவிதைகள். இவற்றில் தலைப்பு உட்பட ஒரு வரிகூட என்னுடையதில்லை. 'எடிட்'டிங்கும் 'அசெம்ப்ளேஜ்'ஜும் மட்டுமே என் கைங்கர்யம். ஆதித்தச்சன் பிரிகோலருக்கும் 'செல்லுலாய்டு மயன்' ஐசன்ஸ்டீனுக்கும் நன்றி சொல்லி....}

1. எழுதத் தவறிய என்கவிதை

எதுஎது எதனெதன் எதுஎதுவோ
அதுஅது அதனதன் அதுஅதுவே

எழுது உனது கவிதையை
நீயே எழுது
உனது கவிதையை
நான் ஏன் எழுதவில்லை
என்றென்னைக் கேட்காதே.

நகுலனைப் போல்
என்னால் எழுதமுடியாது
என்னை மாதிரி
எழுத மாட்டார் நகுலன்.

இதைப்போல ...
எதுவும் இல்லை
எதைப்போலும்.

என் கவிதையை நான் தான்
எழுதவேண்டும் என்ற
நிர்ப்பந்தம் ஏதுமில்லை.

எல்லாவற்றிலும் என்கவிதையை
அல்லது
நான் எழுதத் தவறிய
கவிதைகளைக் காண்கிறேன்.
______
*வாவா அபின்*பசுவய்யா
*பார்கவ நம்பி*Non-being*நகுலன்*

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.