Posts

தென்புலத்தின் திருஒளியே

Image
இருள்செறிவார் மனப் புரிதல் மண்டும் ஜாதி எண்ணரிய களைகளெனக் கிண்டும் போதில் மருள்வெறியார் மதக்காட்டில் மடமைச் சேற்றில் அருள்நெறியே வாழ்வாகி கனிந்த நெஞ்சே ஆரியத்தால் சுடச்சுடரும் ஆடகப் பொன்னே தெருள்நெறியே இயற்கையென தெளிந்த பெம்மோய் தென்புலத்தின் திருஒளியே வள்ளல் அய்யா - பொதிகைச் சித்தர் 04-06-2018

சிறியனவே சிந்திப்போம்

சிறியன சிந்தியாதோர் பெரிதுனும் பெரிதே கேட்கட்டும் சிறியனவே சிந்திப்போம் சிற்றிதழ் சிறுதானியம் சிறுதெய்வம் சிற்றின்பமும் மற்றாங்கே பனுவலின்பம் பரவசமாய் சிறியனவே சிந்திப்போம் - பொதிகைச் சித்தர்

Collage Poems

Image

இலக்கியபீடம் தகர்க்கும் இலக்கியஅரசியல் - ஜமாலன்

சிந்திப்பது படைப்பதற்கே - அதைத் தவிர வேறு படைப்பேதுமில்லை – ஆனால் முதலாவதாக படைத்தல் எனபது சிந்தனையில் ”சிந்திப்பதை” தோற்றுவிப்பதே. - டெல்யுஸ் (Difference and Repetition, 147) [1] அரசியல்இலக்கியம் எழுதுவது ஒருவகை என்றால் இலக்கியத்தின் அரசியலை எழுதுவது பிறிதொருவகை. தோழர் பொதி தொடர்ந்து இலக்கியத்தின் அரசியலை எழுதிக்கொண்டிருப்பவர். எந்த பீட உருவாக்கத்தையும் அதன் அடிமடியில் அடித்துத் தகர்ப்பதும், பீடங்களற்ற இலக்கியஆக்கம் பற்றிய அவாவுமே இத்தொகுப்பில் நாம் வாசிக்கும் கட்டுரைகளின் அடிப்படை.  கடந்த 30 ஆண்டுகளில் தோழர் பொதியவெற்பன் அவர்கள் தொடர்ந்து இதனைத் தனது தனித்துவமான இலக்கியச் செயல்பாடாக வரித்துக் கொண்டுள்ளார். தோழரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 12-ஆம் வகுப்பு படித்த காலத்தில் (1981-82) நாங்கள் நடத்திய ’ஜனகனமன’ என்ற உருட்டச்சிதழை அவர் நடத்திவந்த ’முனைவனு’-க்கு அனுப்பியபின் ஒருநாள் அவரைச் சந்தித்ததில் துவங்கியது நட்பு. இலக்கியவாசகனாக அவரிடம் கற்றது பல. குடந்தை கல்லூரியில் படித்த அடுத்த மூன்று ஆண்டுகளிலும் தினமும் அவரைச் சந்திப்பதும் இலக்கியம், அரசியல், சிறுபத்திரிக்கை, வா

உயிர் எழுத்து பத்திரிக்கையில் வெளிவந்த எனது நேர்காணல்

Image

புனைவுகளாகவும் வாசிக்கமுடியும் விமர்சனக்கட்டுரைகளின் அழகியல்

கண்ணகன் “ எத்தனை எத்தனையோ சிந்தனைப்பள்ளிகள் ; எத்தனை எத்தனையோ கவிதைப்பள்ளிகள் ; எத்தனை எத்தனையோ செல்நெறிகள் . ஆனால் இங்கே தத்தம் இயக்கச்சார்பு   மற்றும் செல்நெறிச்சார்புகளை மட்டுமே முன்னிறுத்தி ஏனிந்த நிராகரிப்பின் அரசியல் ? பெருங்கதையாடல்களின் தகர்வினை முன்னிறுத்தும் இந்தப் பின்னைநவீனத்துவ ஊழியில் அப்படி என்ன இந்த நவீனகவிதைப் பிதாமகன்களின் ஏகசக்ராதிபத்தியங்கள் ? அழகியலின் பேரால் இது இங்கு நிகழ்த்தப்படும் கவிதை அரசியல்தானே . அனைவருக்கும் பொதுவான அழகியல்நியதி என்பது மட்டும் எப்படி சாத்தியப்படும் - வே . மு . பொதியவெற்பன்    எமது ஆய்வுச்சூழலில் கோட்பாடுகளை முன்வைத்து வெளிவரும் நூல்களை , தனித்த அளவில் கோட்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தி விளக்கிச் செல்வனவாகவும், கோட்பாடுகளை அடிப்படை அணுகுமுறைகளாகக் கொண்டு பிரதிகளை ஆய்விற்குட்படுத்தவனவாகவும் இரு நிலைகளில் அடையாளங்காணமுடியும் . படைப்பாக்க நெறிமைகள் குறித்தோ திறனாய்வு அளவீடுகள் குறித்தோ தேவையாய் இருக்கும், இத்தகைய பகிர்வுப்புல பொதுமைத்தன