Posts

Showing posts from November, 2013

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

(திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருந்த்தல் நூலை முன்வைத்து) இரா.கந்தசாமி        சாமான்ய ப் ப டிப்பாளியாக வாழ்ந்திருக்கக் கொடுப்பினை உள்ள மனித இருப்பு ஒன்றின் சமூக , வரலாற்றுக் கடன்கள் எவையெவை ? மனித உரு தாங்கி இம்மண்ணில் விழுந்துவிட்ட உயிர்மைக்கான அறுதிப் பொறுப்புதான் என்ன ? மனிதம் – உயிர்கள் - கோடானுகோடிப் பொருட்கள் - காலம் , வெளி – பால்வீதி - அண்டவெளி எனும்   பெருவட்டப் பயணத்தில் மீண்டும் மனிதம் வரும் படிப்பாளி , தன் சாமானியப் படிப்பமைதியை இதயார்த்தம் மிக்க அறிவின் துணைகொண்டு மாந்தம் வளைத்து அரவணைக்கும் உயிர் அன்பே அந்த அறுதிப் பொறுப்பு; இத்தாவர சங்கமத்தின் கடலுள் ஒரு கையளவு வாழ்வின் பொருள்; பொதிகைச் சித்தரின் மொழியில் எம்மனோர்க்குக் கையளிக்கப்படும் பாடம் . அப்படித்தான் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது வே . மு . பொதியவெற்பன் அவர்களின் ' திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் ' நூல் . சாமானியப் படிப்பாளி எனத் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்ளும் பொதியவெற்பனின் இதயப்பூர்வமான தருக்கப்பூர்வம் . ' இப்பனுவ